The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தூய்மை இந்தியா இயக்கம் (அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan) நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும். இந்த இயக்கத்தை அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
என்விடியா (Nvidia) (உச்சரிப்பு /ɛnˈvɪ.di.ə/) என்பது பணித்தளங்கள், தனிநபர் கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்கள் ஆகியவற்றுக்கான கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் மற்றும் சில்லுத்தொகுப்பு ஆகிய தொழில்நுட்பங்களின் மேம்பாட்டில் சிறந்து விளங்குகின்ற ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவை மையமாகக் கொண்ட இந்நிறுவனம் கிராபிக்ஸ் கார்டுகள், தனிநபர் கணினி மதர்போர்டுகள் மற்றும் வீடியோ கேம் கன்சோல்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்ற ஒருங்கிணைச் சுற்றுகள் (ஐ.சீக்கள்), கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (ஜி.பீ.யூகள்) வடிவமைப்பு மற்றும் சில்லுத்தொகுப்புகள் ஆகியவற்றின் முக்கிய வழங்குநராக மாறியுள்ளது.
ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.
நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம், மற்றும் ஓமியோபதி துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.
புளூடூத் தமிழ்: ஊடலை அல்லது திறக்கற்றை (Bluetooth) என்பது குறைந்த தொலைவிலுள்ள நிலையான அல்லது மொபைல் சாதனங்களிடையே தரவைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு திறந்த தரநிலை கம்பியில்லா நெறிமுறை ஆகும். இவ்வாறு இது தனிப்பரப்பு வலையமைப்புகளை (PANகள்) உருவாக்குகிறது. இது RS232 தரவு வடத்திற்கான கம்பியில்லா மாற்றாகவே கருதப்பட்டது.
மேனிலைத் தரவு அல்லது மேல்தரவு (ஆங்கிலத்தில் மெட்டாடேட்டா (Metadata)), ' என்பது பொதுவாக தரவுகளைப் பற்றிய ஒரு தரவு அல்லது தரவுகளை உள்ளடக்கிய தரவு எனலாம். ஊடங்கங்களைப் பற்றிப் பேசும்பொழுது, இதனை ஓர் ஊடகத்தின் ஏதேனும் ஒரு வகை "தரவுகளின் தரவுகள்" என்றும் சொல்லலாம். மேனிலைத் தரவு (மெட்டாடேட்டா) என்பது, பார்வையாளர்கள் பார்க்க அல்லது அனுபவம் பெற விரும்பும் அல்லது தேவைப்படும் ஒன்றை விவரிக்கும் உரை, ஒலி அல்லது படமாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
வார்ப்புரு:Expert-subject-multiple வார்ப்புரு:ADR பேரப் பேச்சு என்பது பேச்சுவார்த்தை மூலம் விவாதங்களுக்கு தீர்வு காண்பது; பல்வேறு செயல்களில் உடன்படிக்கை ஏற்படுத்தி, தனிமனிதர் அல்லது ஒருமித்த மேம்பாட்டிற்காக பேரம் செய்வது, அல்லது பல்வேறு ஆர்வத்தை நிறைவேற்றுவதற்காக வஞ்சனை செய்வது போன்றவற்றைக் குறிக்கிறது. இது மாற்றுவழி விவாத தீர்மானத்தின் முதன்மை முறையாகும். வியாபாரம், இலாபம்-எதிர்பாரத நிறுவனங்கள், அரசாங்க துறைகள், சட்டம் சார்ந்த செயல்முறை ஆணைகள், நாடுகளுக்கு இடையே அல்லது திருமணம், விவாகரத்து, பெற்றோராவது மற்றும் தினசரி வாழ்வில் பேரப் பேச்சு நிகழ்கிறது.
நீலத் திமிங்கில விளையாட்டு (Blue Whale Game, (உருசியம்: Синий кит, Siniy kit) "புளூவேல் சேலஞ்" என்றும் அழைக்கப்படுவது, பல நாடுகளிலும் இருப்பதாகச்சொல்லப்படுவது இணையத்தில் குழுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டுக் காலமான 50 நாள்களில் விளையாடுபவர்கள் நிர்வாகிகளால் ஒதுக்கப்படும் பணிகளைத் தொடர்ந்து செய்யவேண்டும். இறுதி சவால் என்பது விளையாடுபவர் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்பதாகும்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
--> Google Earth (கூகிள் எர்த்) என்பது உண்மையில் எர்த் வியூவர் என அழைக்கப்படும் ஒரு விர்ச்சுவல் குளோப் (virtual globe), வரைபடம் (map) மற்றும் புவியியல் (geographic) தகவல் (information) நிரல் ஆகும். மற்றும் 2004ல் Google(கூகிள்) (Google) நிறுவனத்தால் வாங்கப்பட்ட Keyhole, Inc(கீ ஹோல், இன்க்) (Keyhole, Inc), நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும்.அது புவியை (Earth) செயற்கைக் கோள் புகைப்படம் (satellite imagery) வான்பார்வை நிழற்படம் (aerial photography), மற்றும் ஜிஐஎஸ் (GIS) முப்பரிமாணம் (3D) புவி ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட படங்களை மேல்பதித்தல் (superimposition)மூலம் வரைபடமாக்குகிறது.இது மூன்று வெவ்வேறு உரிமங்களின் கீழ் கிடைக்கிறது: Google Earth (கூகிள் எர்த்) , அளவான செயல்பாடுகளை உடைய ஒரு இலவசப் பதிப்பு; Google Earth Plus (கூகிள் எர்த் ப்ளஸ்) (விலக்கிக் கொள்ளப்பட்டது), கூடுதல் அம்சங்களை உள்ளடக்கியது; மற்றும் Google Earth Pro (கூகிள் எர்த் ப்ரோ)(வருடத்திற்கு 400$ ), வணிக ரீதியான பயன்பாட்டுக்கானது. 2005-ல் Google Earth (கூகிள் எர்த்) என மறு வெளியீடு செய்யப்பட்ட இந்தப் பொருளானது தற்போது Microsoft Windows (மைக்ரோசாப்ட் விண்டோஸ்) (Microsoft Windows) 2000 (2000), எக்ஸ்பி (XP), விஸ்டா (Vista), மேக் ஓஎஸ் எக்ஸ் (Mac OS X) 10.3.9 மற்றும் அதற்கும் மேற்பட்ட பதிப்புகள் லினக்ஸ் (Linux) (2006 ஜுன் 12-ல் வெளியிடப்பட்டது), மற்றும் ப்ரீ பிஎஸ்டி (FreeBSD).
விநியோகச் சங்கிலி மேலாண்மை என்பது உள்ளிணைந்துள்ள வணிகங்களின் வலைப்பின்னல், இறுதி நுகர்வோர்களால் விரும்பப்படும் உச்சபட்ச பொருள் மற்றும் சேவைகள் தொகுப்புகளின் அளிப்பாகும் (ஹர்லாந்து, 1996). விநியோகச் சங்கிலி மேலாண்மை அனைத்து கச்சாப்பொருட்கள், பணி நிகழ்வு பதிவு, மறும் இறுதிப் பொருட்களின் தோற்றத்திலிருந்து இறுதி நுகர்வு வரை (விநியோகச் சங்கிலி) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
சிம்பியன் இயக்கமுறைமை என்பது நூலகங்கள், பயனர் இடைமுகம், பணிச்சட்டங்கள் (frameworks) மற்றும் பொதுவான கருவிகளின் குறிப்புதவி செயலாக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மொபைல் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்காக வடிவமைக்கபட்ட இயக்கமுறைமை (OS) ஆகும். ஆரம்பத்தில் இது சிம்பியன் லிமிட்டடு (Symbian Ltd.) மூலமாக உருவாக்கப்பட்டது. இது பீசியனின் (Psion)'s EPOC இயக்கமுறைமையின் தலைமுறையான இது தனிப்பட்ட முறையில் ARM மற்றும் x86 செயலிகளில் இயங்க கூடியது, எனினும் x86 செயலியில் வெளியிடப்படவில்லை.
டெங்குக் காய்ச்சல் (Dengue fever) என்ற டெங்கி காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும்.
கணிப்பொறி மென்பொருள் அல்லது மென்பொருள் என்பது கணிப்பொறி நிரல்கள் மற்றும் கணிப்பொறிகளால் படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற எண்ணிம முறையில் சேமிக்கப்படும் தரவு என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்ற பொதுவான ஒரு சொல்லாகும். இன்று இந்தச் சொல் திரைப்படச் சுருள், நாடாக்கள் மற்றும் பதிவுப்பொருட்கள் போன்று வழக்கமாக கணிப்பொறியோடு தொடர்புகொண்டிராத தரவையும் உள்ளடக்கியிருக்கிறது.. இந்த சொற்பதம் வன்பொருள் (அதாவது உடலியல் சாதனங்கள்) என்ற பழைய சொல்லுக்கு முரணாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது; வன்பொருள் என்பதற்கு முரணாக மென்பொருள் என்பது கண்ணுக்குப் புலப்படாதது, அதாவது "தொட இயலாதது" என்பதைக் குறிக்கிறது..
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு.1 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
களப் பெயர் முறைமை (Domain Name System) என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமைப்பில் இணைப்புற்றிருக்கும் எந்த வள ஆதாரங்களுக்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். பங்கேற்கும் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் களப் பெயர்களுடன் இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது. மிக முக்கியமாக, மனிதருக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை இந்த சாதனங்களை உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது.
பார்கோடு என்பது குறிப்பிட்ட பொருட்களின் மீது அதுபற்றிய சில தகவல்களைக் காண்பிக்கும் ஒளியியல் பொறியால் படிக்கப்படக்கூடிய தரவின் குறிப்பிடுதல் ஆகும். பார்கோடுகள் முதலில் அகலங்கள்(வரிகள்) மற்றும் இணை வரிகளின் இடைவெளிகள் ஆகியவற்றின் மூலம் தகவலைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. மேலும் அவை நேரோட்ட அல்லது 1D (1 பரிமாணம்) பார்கோடுகள் அல்லது குறியியல்கள் போன்றவையாக குறிப்பிடப்படலாம்.
கூட்டக நிறுவன ஆளுகை (Corporate governance) என்பது ஒரு கூட்டக நிறுவனம் (அல்லது நிறுவனம்) இயக்கப்படும், நிர்வகிக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் விதத்தைப் பாதிக்கக்கூடிய செயலாக்கங்கள், பழக்கவழக்கங்கள், கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நெடுங்கால நடைமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும். கூட்டக நிறுவன ஆளுகை என்பது நடுநிலை முதலீட்டாளர்களின் ஈடுபாடு மற்றும் கூட்டக நிறுவனம் இயக்கப்படுவதற்கான இலக்குகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. பங்குதாரர்கள்/உறுப்பினர்கள், நிர்வாகம் மற்றும் இயக்குநர் குழுமம் ஆகியவர்கள் முக்கியமான நடுநிலை முதலீட்டாளர்களாவர்.
இந்திய அரசு (Government of India, இந்தி: भारत सरकार, பாரத் சர்க்கார்), இந்திய நாட்டின் ஒன்றிய அரசு. இது இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பெற்றது. அதுமட்டுமில்லாமல் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, குடியரசு இந்தியாவில் அடங்கிய 29 மாநிலங்களையும் மற்றும் 7 ஆட்சிநிலப் பகுதிகளையும் தன் ஆளுமையில் ஒன்றிணைக்கின்றது.
மறைசெய்தியியல் (ஆங்கிலம் - Steganography) (ஸ்டிகனோகிராபி), என்பது அனுப்புபவர் மற்றும் பெறுபவரைத் தவிர வேறு ஒருவருக்கும் அங்கு ஒரு செய்தி இருக்கிறது என்கிற சந்தேகமே தோன்றாத வகையில், மறைசெய்திகளாக செய்திகளை எழுதும் கலை மற்றும் அறிவியல் ஆகும். இது புலப்பாடுக்கு தெளிவற்று இருப்பதன் மூலம் செய்தியைப் பாதுகாக்கிறது. ஸ்டிகனோகிராபி என்கிற வார்த்தை கிரேக்க மூலத்தில் இருந்து வந்ததாகும், இதன் பொருள் “மறைபொருளுடன் எழுதுவது” என்பதாகும்.
சாதாரண கோப்புப் பரிமாற்ற வரைமுறை
சாதாரண கோப்புப் பரிமாற்ற வரைமுறை (Trivial File Transfer Protocol, TFTP) என்பது கோப்புப் பரிமாற்ற வரைமுறையின் (FTP) மிகவும் அடிப்படை வடிவ செயல்பாடுகளுடன் கூடிய கோப்புப் பரிமாற்ற வரைமுறை ஆகும்; அது முதலில் 1980 இல் வரையறுக்கப்பட்டது. அதன் எளிமையான வடிவம் காரணமாக, TFTP மிகவும் குறைவான அளவு நினைவகத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதாக இருக்கிறது. அந்த நேரத்தில் இது முக்கியமாகக் கருதப்பட்டது.
ஹெட்ஜ் நிதி என்பது, நீண்டகாலத்திற்கு மட்டுமான முதலீட்டு நிதிகளை விட பரந்த அளவிலான முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற வரம்பிற்குட்பட்ட முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு நிதி என்பதுடன், பொதுவாக இதனுடைய முதலீட்டு நிர்வாகிக்கு செயல்திறன் கட்டணத்தை செலுத்துவதும் ஆகும். ஒவ்வொரு ஹெட்ஜ் நிதியும் அது மேற்கொள்ளும் முதலீட்டு வகைகள் மற்றும் முறைகளைத் தீர்மானிக்கின்ற தனதேயான முதலீட்டு வியூகங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு பிரிவாக உள்ள ஹெட்ஜ் நிதி பங்குகள், கடன் மற்றும் சரக்குகள் உள்ளிட்ட பரந்த அளவிலான முதலீடுகளில் முதலீடு செய்கிறது.
பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும்.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளைஅல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதை தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன. வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக்குறிப்பிட்ட சாதனங்கள் ,சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்,. இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்
தமிழ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட வகை பறவைகள் பார்க்கலாம்.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000 -ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி, தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது.
பின்னோக்குப் பொறியியல் (Reverse Engineering, RE) என்பது ஒரு கருவி, பொருள் அல்லது அமைப்பு ஆகியவற்றின் கட்டமைப்பு, இயக்கம், செயல்பாடு ஆகியவற்றின் பகுப்பாய்வைக் கொண்டு அதன் தொழில்நுட்ப அடிப்படை கருத்துக்களை கண்டுபிடிக்கும் செயலாக்கம் ஆகும். அது, ஏதாவது ஒன்றை (எ.டு. ஒரு இயந்திரம், எலக்ட்ரானிக் கூறு அல்லது மென்பொருள்) எடுத்து, பராமரிப்பில் அதன் செயல்பாட்டினை பகுத்தறிதல் அல்லது அதன் எந்த பூர்வாங்க பாகத்தையும் பயன்படுத்தாமல், அந்த பொருள் செய்யும் அதே வேலையைச்செய்யும் புதிய கருவியை உருவாக்க முயற்சித்தல், என்பதாகும்.
இணக்கி (Modem) என்பது கணினியில் உள்ள புற உலகத்துடன் தொடர்புகொள்ளும் ஓர் உறுப்பு. இது கணினிக்குப் புறத்தே இருந்து வரும் குறிப்பலைகளைத் (குறிகைகளை) தக்கவாறு உள்வாங்கவும் வெளிசெலுத்தவும் பயன்படும் ஒரு கருவி. மோடம் (modem) என்னும் ஆங்கிலச்சொல் mo dulator (மாடுலேட்டர்)-dem odulator (டிமாடுலேட்டர்) என்னும் இரு சொற்களின் சுருக்குவடிவாக ஆன ஒரு செயற்கையான கூட்டுச்சொல்.
கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும்.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
உயர் இரத்த அழுத்தம் (hypertension) சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த(மருந்து) / நீடித்த நோய் / மருத்துவ நிலை ஆகும். இரத்தக் குழாய்களின் மூலமாக செயல் படும் இரத்த ஓட்டத்திற்கு, இந்த உயர்த்தப்பெற்ற நிலையினால் இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இதய துடிப்புகளுக்கிடையே இதய தசை சுருங்குவது (சிஸ்டோல்) அல்லது தளர்வுறுவது ( டைஸ்டோல் ) என்பதை பொறுத்து இரத்த அழுத்தம் இதய சுருங்கியக்க அழுத்தம் மற்றும் விரிவியக்க அழுத்தம் என்ற இரண்டு அளவுகளை உள்ளடக்கியது.
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் சாதிகள் (76) பட்டியல் பழங்குடியினர் (36) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79) என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
இந்திய அரசியலமைப்பு (இந்தி: भारतीय़ संविधान, ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
கபடி அல்லது சடுகுடுஅல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. ஜல்லிக்கட்டிற்கு(ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
புவி வெப்பமயமாதல் என்பது பூமியினுடைய சுற்றுப்புற பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை உயர்வை குறிக்கும்.20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமயமாதல் எனப்படுகிறது. சென்ற நூண்றான்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு
சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு (Community-led total sanitation) (CLTS) எனும் அணுகுமுறை ஊரகமக்களின் திறந்தவெளிக் கழிப்பு பழக்கத்தைத் தன்னியல்பாகவும் நெடுங்கால நோக்கோடும் அகற்றும் நடத்தை மாற்றத்தை அடைய உருவாக்கப்பட்ட இயக்கமாகும். இது வங்க தேசத்தில் 2000 ஆம் ஆண்டளவில் கமல்கார் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்கருத்து மக்களிடையே துப்புரவீனம் குறித்த வெட்கத்தையும்வேதனையையும் தூண்டி அவர்களுக்குள்ளே புதிய மாற்றத்தை உருவாக்க முயல்கிறது.இது வங்க தேசம் முழுவதும் பரப்பப்பட்டது.
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
இந்தியாவில் இந்து சமயத்தினரிடையே திருமணத்திற்கு ஜோதிட வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
சிவன் (Śiva) என்பவர் இந்துப் பிரிவான சைவசமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். சைவநம்பிக்கையின் படி, மும்மூர்த்திகளையும், முழுப் புடவியையும் ஆக்கிக் காப்பவரும், பேரூழியில் அனைத்தையும் அழிப்பவரும் சிவனே. ஏனைய இந்துப் பிரிவுகளில், மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.
தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி (இந்தித் தொடர்)
தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி (இந்தி: तारक मेहता का उल्टा चश्मा, தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா) நீல் டெலிபிலிம்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தி நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத் தொடராகும். இது சூலை 28, 2008 முதல் சப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொடர் இதழியலாளர் தாரக் மேத்தா குசராத்தி வார இதழ் சித்திரலேகாவில் எழுதிவந்த துனியா நே ஊந்தா சஷ்மா என்ற கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது.
மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரைத் திரட்டி, ஒருங்கே குவித்து, சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு, கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கடடிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்....
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
மிளகு (பைப்பர் நிக்ரம் Piper nigrum) என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு பங்குச் சந்தை (Stock market) என்பது ஒரு பொதுச் சந்தை (பொருளாதார பரிமாற்றங்களின் தளர்த்தப்பட்ட நெட்வொர்க். ஆனால் ஒரு நிஜ அமைப்போ அல்லது தனித்தியங்கும் அமைப்போ அல்ல), அதில் நிறுவனங்களின் பங்கு மற்றும் தொடர்பான கூறுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் வியாபாரம் செய்யப்படும்; இவை பங்கு பரிமாற்றகத்தில் பட்டியலிடப்பட்ட கடனீட்டு ஆவணங்கள் ஆகும், அதோடு அவை தனிப்பட்ட விதத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும். அக்டோபர் 2008இன் தொடக்கத்தில் உலக பங்குச் சந்தையின் அளவு ஏறக்குறைய 36.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கணக்கிடப்பட்டுள்ளது.
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar உச்சரிப்பு, பிறப்பு ஏப்ரல் 24, 1973) ஓர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர்.துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக அனைவராலும் கருதப்படுகிறார் . தனது 16ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலகத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். தேர்வுப் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே; வரையறுக்கப்பட்ட பந்துப் பரிமாற்ற அனைத்துலகப் போட்டிகளில் (LOI) முதலாவது இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும்.
வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு நபர் வேலை செய்யத் தயாராகவும் விருப்பத்துடனும் இருந்து ஆனால் அவர் தற்போது வேலையின்றி இருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதாகும். வழக்கமாக வேலைவாய்ப்பின்மையின் விகிதத்தைப் பயன்படுத்தி மேலோங்கப்படும் வேலைவாய்ப்பின்மை அளவிடப்படுகிறது. இங்கு தொழிலாளர் ஆற்றலில் வேலையில்லாதவர்களைக் கொண்டு சதவீதம் வரையறுக்கப்படுகிறது.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
ஃபோர்டு பீஸ்டா என்பது ஃபோர்டு மோட்டார் நிறுவனம் வாயிலாக உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட முன்சக்கர இயக்க மிக அடக்கமான/சூப்பர்மினி கார் ஆகும். மேலும் இது ஐரோப்பா, பிரேசில், அர்ஜென்டினா, மெக்சிகோ, வெனிசுலா, சீனா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் கட்டமைக்கப்படுகின்றது. இந்த ரகம் ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்பட உலகளவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் (New 7 Wonders of the World, 2000-2007) என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன 100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல்பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது.
உழவுத் தொழில் அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
கருச்சிதைவு (Miscarriage) என்பது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், முளையமோ அல்லது முதிர்கருவோ மேலும் உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்துபோதல் அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கும். இது பொதுவாகக் கருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில், அதாவது கருக்காலத்தின் 20 கிழமைக்குள் தன்னிச்சையாக நிகழும் ஒரு சிக்கலான நிலையாகும். இந்தக் கால எல்லை நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் கூறப்படுகின்றது.
சூரியக் குடும்பம் (Solar System) அல்லது சூரியத் தொகுதி என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். இச் சூரியத்தொகுதி கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இதுவரை தெரிந்த கணக்கெடுப்பின்படி) துணைக்கோள்களையும், சிந்து குறுங்கோள்களையும், அக்குறுங்கோள்களின் துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற வான்பொருட்களையும் உள்ளடக்கியது. வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் போன்றவையும் சூரியத் தொகுதியில் காணப்படுகின்றன.
டைஃபாய்டு காய்ச்சல் என்பது, சால்மோனெல்லா டைஃபி அல்லது பொதுவாக குடற்காய்ச்சல் என்று அழைக்கப்படும் ஒரு வகையான நோய் ஆகும். உலகம் முழுவதும் பொதுவாக, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் மலத்தினால் அசுத்தமாக்கப்பட்ட உணவு அல்லது தண்ணீரை உட்கொள்ளுவதால் இது பரவுகின்றது. பின்னர், இந்த நுண்ணுயிரி (பாக்டீரியா) கிருமி, குடல் சுவரை துளைத்து நுழைந்து இரத்த விழுங்கணுக்களினால் விழுங்கப்படுகிறது.