The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
என்விடியா (Nvidia) (உச்சரிப்பு /ɛnˈvɪ.di.ə/) என்பது பணித்தளங்கள், தனிநபர் கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்கள் ஆகியவற்றுக்கான கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் மற்றும் சில்லுத்தொகுப்பு ஆகிய தொழில்நுட்பங்களின் மேம்பாட்டில் சிறந்து விளங்குகின்ற ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவை மையமாகக் கொண்ட இந்நிறுவனம் கிராபிக்ஸ் கார்டுகள், தனிநபர் கணினி மதர்போர்டுகள் மற்றும் வீடியோ கேம் கன்சோல்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்ற ஒருங்கிணைச் சுற்றுகள் (ஐ.சீக்கள்), கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (ஜி.பீ.யூகள்) வடிவமைப்பு மற்றும் சில்லுத்தொகுப்புகள் ஆகியவற்றின் முக்கிய வழங்குநராக மாறியுள்ளது.
தூய்மை இந்தியா இயக்கம் (அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan) நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும். இந்த இயக்கத்தை அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
புளூடூத் தமிழ்: ஊடலை அல்லது திறக்கற்றை (Bluetooth) என்பது குறைந்த தொலைவிலுள்ள நிலையான அல்லது மொபைல் சாதனங்களிடையே தரவைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு திறந்த தரநிலை கம்பியில்லா நெறிமுறை ஆகும். இவ்வாறு இது தனிப்பரப்பு வலையமைப்புகளை (PANகள்) உருவாக்குகிறது. இது RS232 தரவு வடத்திற்கான கம்பியில்லா மாற்றாகவே கருதப்பட்டது.
நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம், மற்றும் ஓமியோபதி துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.
ஒரு பங்குச் சந்தை (Stock market) என்பது ஒரு பொதுச் சந்தை (பொருளாதார பரிமாற்றங்களின் தளர்த்தப்பட்ட நெட்வொர்க். ஆனால் ஒரு நிஜ அமைப்போ அல்லது தனித்தியங்கும் அமைப்போ அல்ல), அதில் நிறுவனங்களின் பங்கு மற்றும் தொடர்பான கூறுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் வியாபாரம் செய்யப்படும்; இவை பங்கு பரிமாற்றகத்தில் பட்டியலிடப்பட்ட கடனீட்டு ஆவணங்கள் ஆகும், அதோடு அவை தனிப்பட்ட விதத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும். அக்டோபர் 2008இன் தொடக்கத்தில் உலக பங்குச் சந்தையின் அளவு ஏறக்குறைய 36.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மேனிலைத் தரவு அல்லது மேல்தரவு (ஆங்கிலத்தில் மெட்டாடேட்டா (Metadata)), ' என்பது பொதுவாக தரவுகளைப் பற்றிய ஒரு தரவு அல்லது தரவுகளை உள்ளடக்கிய தரவு எனலாம். ஊடங்கங்களைப் பற்றிப் பேசும்பொழுது, இதனை ஓர் ஊடகத்தின் ஏதேனும் ஒரு வகை "தரவுகளின் தரவுகள்" என்றும் சொல்லலாம். மேனிலைத் தரவு (மெட்டாடேட்டா) என்பது, பார்வையாளர்கள் பார்க்க அல்லது அனுபவம் பெற விரும்பும் அல்லது தேவைப்படும் ஒன்றை விவரிக்கும் உரை, ஒலி அல்லது படமாகும்.
நீலத் திமிங்கில விளையாட்டு (Blue Whale Game, (உருசியம்: Синий кит, Siniy kit) "புளூவேல் சேலஞ்" என்றும் அழைக்கப்படுவது, பல நாடுகளிலும் இருப்பதாகச்சொல்லப்படுவது இணையத்தில் குழுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டுக் காலமான 50 நாள்களில் விளையாடுபவர்கள் நிர்வாகிகளால் ஒதுக்கப்படும் பணிகளைத் தொடர்ந்து செய்யவேண்டும். இறுதி சவால் என்பது விளையாடுபவர் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்பதாகும்.
டெங்குக் காய்ச்சல் (Dengue fever) என்ற டெங்கி காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும்.
ஐரோ அல்லது யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் (ஐரோ வலய நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும்.
புழக்கத்திலுள்ள நாணயங்களின் பட்டியல்
இந்தப் பட்டியல் 192 ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளின் 194 சட்டவழி மற்றும் செயல்வழி (de facto) நாணயங்களையும், ஒரு ஐநா அவதானி நாட்டினதும், மூன்று பகுதி அங்கீகாரம் பெற்ற இறைமையுள்ள நாடுகளினதும், ஆறு அங்கீகரிக்கப்படாத நாடுகளினதும், 32 சார்பு நாடுகளினதும் நாணயங்களையும் உள்ளடக்கியுள்ளது. சார்பு நாடுகள் சாய்வெழுத்துக்களிலும், பகுதி அல்லது முழு அங்கீகாரம் கொண்ட நாடுகள் தடித்த எழுத்துக்களிலும் காட்டப்பட்டுள்ளன. தலைமை நாட்டிலிருந்து மாறுபட்ட நாணயங்களைப் பயன்படுத்தும் சார்பு நாடுகள் மட்டுமே இங்கு காட்டப்பட்டுள்ளன.
பார்கோடு என்பது குறிப்பிட்ட பொருட்களின் மீது அதுபற்றிய சில தகவல்களைக் காண்பிக்கும் ஒளியியல் பொறியால் படிக்கப்படக்கூடிய தரவின் குறிப்பிடுதல் ஆகும். பார்கோடுகள் முதலில் அகலங்கள்(வரிகள்) மற்றும் இணை வரிகளின் இடைவெளிகள் ஆகியவற்றின் மூலம் தகவலைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. மேலும் அவை நேரோட்ட அல்லது 1D (1 பரிமாணம்) பார்கோடுகள் அல்லது குறியியல்கள் போன்றவையாக குறிப்பிடப்படலாம்.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு.1 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
--> Google Earth (கூகிள் எர்த்) என்பது உண்மையில் எர்த் வியூவர் என அழைக்கப்படும் ஒரு விர்ச்சுவல் குளோப் (virtual globe), வரைபடம் (map) மற்றும் புவியியல் (geographic) தகவல் (information) நிரல் ஆகும். மற்றும் 2004ல் Google(கூகிள்) (Google) நிறுவனத்தால் வாங்கப்பட்ட Keyhole, Inc(கீ ஹோல், இன்க்) (Keyhole, Inc), நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும்.அது புவியை (Earth) செயற்கைக் கோள் புகைப்படம் (satellite imagery) வான்பார்வை நிழற்படம் (aerial photography), மற்றும் ஜிஐஎஸ் (GIS) முப்பரிமாணம் (3D) புவி ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட படங்களை மேல்பதித்தல் (superimposition)மூலம் வரைபடமாக்குகிறது.இது மூன்று வெவ்வேறு உரிமங்களின் கீழ் கிடைக்கிறது: Google Earth (கூகிள் எர்த்) , அளவான செயல்பாடுகளை உடைய ஒரு இலவசப் பதிப்பு; Google Earth Plus (கூகிள் எர்த் ப்ளஸ்) (விலக்கிக் கொள்ளப்பட்டது), கூடுதல் அம்சங்களை உள்ளடக்கியது; மற்றும் Google Earth Pro (கூகிள் எர்த் ப்ரோ)(வருடத்திற்கு 400$ ), வணிக ரீதியான பயன்பாட்டுக்கானது. 2005-ல் Google Earth (கூகிள் எர்த்) என மறு வெளியீடு செய்யப்பட்ட இந்தப் பொருளானது தற்போது Microsoft Windows (மைக்ரோசாப்ட் விண்டோஸ்) (Microsoft Windows) 2000 (2000), எக்ஸ்பி (XP), விஸ்டா (Vista), மேக் ஓஎஸ் எக்ஸ் (Mac OS X) 10.3.9 மற்றும் அதற்கும் மேற்பட்ட பதிப்புகள் லினக்ஸ் (Linux) (2006 ஜுன் 12-ல் வெளியிடப்பட்டது), மற்றும் ப்ரீ பிஎஸ்டி (FreeBSD).
களப் பெயர் முறைமை (Domain Name System) என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமைப்பில் இணைப்புற்றிருக்கும் எந்த வள ஆதாரங்களுக்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். பங்கேற்கும் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் களப் பெயர்களுடன் இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது. மிக முக்கியமாக, மனிதருக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை இந்த சாதனங்களை உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது.
இயக்கு தளம்(English: Operating System) என்பது கணினியின் உள் உறுப்புகளையும், கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்கத்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருக்கும் அடிப்படை மென்பொருளாகும். எந்த ஒரு கணினியும் இயங்க ஒரு இயக்கு தள மென்பொருள் இருப்பது இன்றியமையாதது. இயக்கு தளமானது கணினியின் நினைவகத்தின் இடங்களை முறைப்படி பகிர்ந்தளிப்பது, கோப்புகளை சீருறுத்தி பராமரிப்பது, பல்வேறு பணிகளை கட்டுப்படுத்துவது, வரிசைப்படுத்துவது, மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட தரவு உள்ளீடு கருவிகளையும், தரவு வெளியீடு கருவிகளையும் சீராக பணிப்பது, பிற மின்வலை தொடர்புகளை வழிப்படுத்துவது என கணினியின் பல்வேறு அடிப்படையான நிகழ்வுகளை நடுவாக இருந்து இயக்குவதே இயக்கு தளம் என்னும் கருவான மென்பொருளாகும்.
பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும்.
விநியோகச் சங்கிலி மேலாண்மை என்பது உள்ளிணைந்துள்ள வணிகங்களின் வலைப்பின்னல், இறுதி நுகர்வோர்களால் விரும்பப்படும் உச்சபட்ச பொருள் மற்றும் சேவைகள் தொகுப்புகளின் அளிப்பாகும் (ஹர்லாந்து, 1996). விநியோகச் சங்கிலி மேலாண்மை அனைத்து கச்சாப்பொருட்கள், பணி நிகழ்வு பதிவு, மறும் இறுதிப் பொருட்களின் தோற்றத்திலிருந்து இறுதி நுகர்வு வரை (விநியோகச் சங்கிலி) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
ஒரு நிறுவனத்தின் பங்கு அல்லது மூலதனப் பங்கு (stock) என்பது அதன் நிறுவனர்கள் அவ்வணிகத்திற்குப் பங்களித்த முதல் மூலதனம் அல்லது முதலீட்டைக் குறிக்கும். அது வணிகத்திற்கு கடனளிக்கும் நபர்களுக்கு அத்னை கடனாளிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக திரும்பப் பெற இயலாது எனும் காரணத்தினால் பாதுகாப்பு அளிக்கும் ஏற்பாடாக சேவையளிக்கிறது. பங்கு என்பது ஒரு வணிகத்தின் உடமை மற்றும் சொத்து போன்றவற்றிலிருந்து வேறுபட்டதாகும்.
புவி வெப்பமயமாதல் என்பது பூமியினுடைய சுற்றுப்புற பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை உயர்வை குறிக்கும்.20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமயமாதல் எனப்படுகிறது. சென்ற நூண்றான்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது.
கணிப்பொறி மென்பொருள் அல்லது மென்பொருள் என்பது கணிப்பொறி நிரல்கள் மற்றும் கணிப்பொறிகளால் படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற எண்ணிம முறையில் சேமிக்கப்படும் தரவு என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்ற பொதுவான ஒரு சொல்லாகும். இன்று இந்தச் சொல் திரைப்படச் சுருள், நாடாக்கள் மற்றும் பதிவுப்பொருட்கள் போன்று வழக்கமாக கணிப்பொறியோடு தொடர்புகொண்டிராத தரவையும் உள்ளடக்கியிருக்கிறது.. இந்த சொற்பதம் வன்பொருள் (அதாவது உடலியல் சாதனங்கள்) என்ற பழைய சொல்லுக்கு முரணாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது; வன்பொருள் என்பதற்கு முரணாக மென்பொருள் என்பது கண்ணுக்குப் புலப்படாதது, அதாவது "தொட இயலாதது" என்பதைக் குறிக்கிறது..
வார்ப்புரு:Expert-subject-multiple வார்ப்புரு:ADR பேரப் பேச்சு என்பது பேச்சுவார்த்தை மூலம் விவாதங்களுக்கு தீர்வு காண்பது; பல்வேறு செயல்களில் உடன்படிக்கை ஏற்படுத்தி, தனிமனிதர் அல்லது ஒருமித்த மேம்பாட்டிற்காக பேரம் செய்வது, அல்லது பல்வேறு ஆர்வத்தை நிறைவேற்றுவதற்காக வஞ்சனை செய்வது போன்றவற்றைக் குறிக்கிறது. இது மாற்றுவழி விவாத தீர்மானத்தின் முதன்மை முறையாகும். வியாபாரம், இலாபம்-எதிர்பாரத நிறுவனங்கள், அரசாங்க துறைகள், சட்டம் சார்ந்த செயல்முறை ஆணைகள், நாடுகளுக்கு இடையே அல்லது திருமணம், விவாகரத்து, பெற்றோராவது மற்றும் தினசரி வாழ்வில் பேரப் பேச்சு நிகழ்கிறது.
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்,. இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
கூட்டக நிறுவன ஆளுகை (Corporate governance) என்பது ஒரு கூட்டக நிறுவனம் (அல்லது நிறுவனம்) இயக்கப்படும், நிர்வகிக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் விதத்தைப் பாதிக்கக்கூடிய செயலாக்கங்கள், பழக்கவழக்கங்கள், கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நெடுங்கால நடைமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும். கூட்டக நிறுவன ஆளுகை என்பது நடுநிலை முதலீட்டாளர்களின் ஈடுபாடு மற்றும் கூட்டக நிறுவனம் இயக்கப்படுவதற்கான இலக்குகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. பங்குதாரர்கள்/உறுப்பினர்கள், நிர்வாகம் மற்றும் இயக்குநர் குழுமம் ஆகியவர்கள் முக்கியமான நடுநிலை முதலீட்டாளர்களாவர்.
இந்திய அரசியலமைப்பு (இந்தி: भारतीय़ संविधान, ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்
தமிழ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட வகை பறவைகள் பார்க்கலாம்.
ஹெட்ஜ் நிதி என்பது, நீண்டகாலத்திற்கு மட்டுமான முதலீட்டு நிதிகளை விட பரந்த அளவிலான முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற வரம்பிற்குட்பட்ட முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு நிதி என்பதுடன், பொதுவாக இதனுடைய முதலீட்டு நிர்வாகிக்கு செயல்திறன் கட்டணத்தை செலுத்துவதும் ஆகும். ஒவ்வொரு ஹெட்ஜ் நிதியும் அது மேற்கொள்ளும் முதலீட்டு வகைகள் மற்றும் முறைகளைத் தீர்மானிக்கின்ற தனதேயான முதலீட்டு வியூகங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு பிரிவாக உள்ள ஹெட்ஜ் நிதி பங்குகள், கடன் மற்றும் சரக்குகள் உள்ளிட்ட பரந்த அளவிலான முதலீடுகளில் முதலீடு செய்கிறது.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
சிம்பியன் இயக்கமுறைமை என்பது நூலகங்கள், பயனர் இடைமுகம், பணிச்சட்டங்கள் (frameworks) மற்றும் பொதுவான கருவிகளின் குறிப்புதவி செயலாக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மொபைல் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்காக வடிவமைக்கபட்ட இயக்கமுறைமை (OS) ஆகும். ஆரம்பத்தில் இது சிம்பியன் லிமிட்டடு (Symbian Ltd.) மூலமாக உருவாக்கப்பட்டது. இது பீசியனின் (Psion)'s EPOC இயக்கமுறைமையின் தலைமுறையான இது தனிப்பட்ட முறையில் ARM மற்றும் x86 செயலிகளில் இயங்க கூடியது, எனினும் x86 செயலியில் வெளியிடப்படவில்லை.
நாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" ஆகும். பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமும், பெறுமானத்தைத் தன்னுள் அடக்கியுள்ள ஒன்றும் ஆகையால், நாணயமும் பணத்தின் ஒரு வடிவம் ஆகும். நாணயம் என்பது நாணயத்தாள், உலோக நாணயம் (நாணயக் குற்றி) என்னும் இரண்டு வடிவங்களில் உள்ளன.
மிளகு (பைப்பர் நிக்ரம் Piper nigrum) என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் (hypertension) சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த(மருந்து) / நீடித்த நோய் / மருத்துவ நிலை ஆகும். இரத்தக் குழாய்களின் மூலமாக செயல் படும் இரத்த ஓட்டத்திற்கு, இந்த உயர்த்தப்பெற்ற நிலையினால் இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இதய துடிப்புகளுக்கிடையே இதய தசை சுருங்குவது (சிஸ்டோல்) அல்லது தளர்வுறுவது ( டைஸ்டோல் ) என்பதை பொறுத்து இரத்த அழுத்தம் இதய சுருங்கியக்க அழுத்தம் மற்றும் விரிவியக்க அழுத்தம் என்ற இரண்டு அளவுகளை உள்ளடக்கியது.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு நபர் வேலை செய்யத் தயாராகவும் விருப்பத்துடனும் இருந்து ஆனால் அவர் தற்போது வேலையின்றி இருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதாகும். வழக்கமாக வேலைவாய்ப்பின்மையின் விகிதத்தைப் பயன்படுத்தி மேலோங்கப்படும் வேலைவாய்ப்பின்மை அளவிடப்படுகிறது. இங்கு தொழிலாளர் ஆற்றலில் வேலையில்லாதவர்களைக் கொண்டு சதவீதம் வரையறுக்கப்படுகிறது.
அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் (New 7 Wonders of the World, 2000-2007) என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன 100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல்பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது.
சாதாரண கோப்புப் பரிமாற்ற வரைமுறை
சாதாரண கோப்புப் பரிமாற்ற வரைமுறை (Trivial File Transfer Protocol, TFTP) என்பது கோப்புப் பரிமாற்ற வரைமுறையின் (FTP) மிகவும் அடிப்படை வடிவ செயல்பாடுகளுடன் கூடிய கோப்புப் பரிமாற்ற வரைமுறை ஆகும்; அது முதலில் 1980 இல் வரையறுக்கப்பட்டது. அதன் எளிமையான வடிவம் காரணமாக, TFTP மிகவும் குறைவான அளவு நினைவகத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதாக இருக்கிறது. அந்த நேரத்தில் இது முக்கியமாகக் கருதப்பட்டது.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளைஅல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதை தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன. வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக்குறிப்பிட்ட சாதனங்கள் ,சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
இந்தியாவில் இந்து சமயத்தினரிடையே திருமணத்திற்கு ஜோதிட வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
சிறிது உப்பு போட்டாலும் உணவிற்கு அற்புத சுவை கூடும்.உணவை கெட்டுப்பபோகாமல் காக்கும் தன்மை உப்பிற்கு உண்டு.உப்பாது கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கும் போதும், பின் பல்வேறு நிலைகளில் சுத்தம் செய்யப்பட்டு கல்உப்பு,தூள் உப்பு என்று பயன்படுத்துகின்றோம். உப்புக்கு நிகராக நாம் எந்த பொருளையும் உபயோகிக்கமுடியாது.சர்க்கரைக்கு பதில் வெல்லம், கருப்பட்டடி, பனங்கற்கண்டு போன்றவற்றை உபயோகிக்கலாம்.மின்சாரம் இல்லையென்றாலும் விளக்கு,மெழுகுதிரி,போன்ற ஒளிதரும் பொருட்களை உபயோகிக்கலாம். பூமியில் இண்டு பாகமாக உள்ள கடல் நீர் நல்ல நீராக இருந்தால் நாம் பயன்படுத்தி தூக்கி எறிகின்ற குப்பைகள் எல்லாம் நதிகள் மூலம் கடலில் சென்று அசுத்தங்களாயிருக்கும்.ஆனால் பாருங்கள் கழிவுகளின் விசத்தன்மையால் கடல் நீர் துர்நாற்றம் வீசுவதில்லை.உலக சுகாதாரத்தையே பாதுகாக்கின்ற பணியைச்செய்வது உப்பாகும்.
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் சாதிகள் (76) பட்டியல் பழங்குடியினர் (36) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79) என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
சிவன் (Śiva) என்பவர் இந்துப் பிரிவான சைவசமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். சைவநம்பிக்கையின் படி, மும்மூர்த்திகளையும், முழுப் புடவியையும் ஆக்கிக் காப்பவரும், பேரூழியில் அனைத்தையும் அழிப்பவரும் சிவனே. ஏனைய இந்துப் பிரிவுகளில், மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.
உலகளாவிய வலை (World Wide Web, www, பொதுவாக "'வலை" எனச் சுருக்கமாக அழைக்கப்படுவது) என்பது இணையத்தின் வழியாக அணுகப்படும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட மீயுரை ஆவணங்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். ஓர் வலை உலாவியைக் கொண்டு உரை, படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பல்லூடகக் கூறுகளைக் கொண்டுள்ள வலைப் பக்கங்களைக் காணவும், மிகை இணைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும். முன்னாளில் இருந்த மீயுரை முறைமைகளைப் பயன்படுத்தி, 1989 ஆம் ஆண்டு ஆங்கில இயற்பியல் ஆய்வாளரும் உலகளாவிய வலைச் சங்கத்தின் தற்போதைய இயக்குநருமான சர் டிம் பெர்னெர்ஸ்-லீ என்பவர் உலகளாவிய வலையைக் கண்டறிந்தார்.
பின்னோக்குப் பொறியியல் (Reverse Engineering, RE) என்பது ஒரு கருவி, பொருள் அல்லது அமைப்பு ஆகியவற்றின் கட்டமைப்பு, இயக்கம், செயல்பாடு ஆகியவற்றின் பகுப்பாய்வைக் கொண்டு அதன் தொழில்நுட்ப அடிப்படை கருத்துக்களை கண்டுபிடிக்கும் செயலாக்கம் ஆகும். அது, ஏதாவது ஒன்றை (எ.டு. ஒரு இயந்திரம், எலக்ட்ரானிக் கூறு அல்லது மென்பொருள்) எடுத்து, பராமரிப்பில் அதன் செயல்பாட்டினை பகுத்தறிதல் அல்லது அதன் எந்த பூர்வாங்க பாகத்தையும் பயன்படுத்தாமல், அந்த பொருள் செய்யும் அதே வேலையைச்செய்யும் புதிய கருவியை உருவாக்க முயற்சித்தல், என்பதாகும்.
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவதும் இந்திய அளவில் 31 ஆவதுமான பெரிய நகரம் ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
கருச்சிதைவு (Miscarriage) என்பது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், முளையமோ அல்லது முதிர்கருவோ மேலும் உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்துபோதல் அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கும். இது பொதுவாகக் கருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில், அதாவது கருக்காலத்தின் 20 கிழமைக்குள் தன்னிச்சையாக நிகழும் ஒரு சிக்கலான நிலையாகும். இந்தக் கால எல்லை நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் கூறப்படுகின்றது.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
கௌரி லங்கேசு (Gauri Lankesh, கௌரி லங்கேஷ், 1962 – 5 செப்டம்பர் 2017) என்பவர் ஒரு இந்தியப் பெண் பத்திரிகையாளரும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் லங்கேசு பத்ரிகே என்ற கன்னட இதழின் முதன்மை ஆசிரியராகப் பணி புரிந்தார். ராணா அய்யூப் எழுதிய புத்தகமான 'குஜராத் ஃபைல்ஸ்' நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார்.
இலங்கை (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)
உலகின் பல விவவிவேகம் 2017 தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்ப ட்டியல்.அ
தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000 -ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி, தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது.
மியன்மார் அல்லது மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா (Myanmar) (myan-MAR-' /miɑːnˈmɑr/ mee-ahn-MAR-', /miˈɛnmɑr/ mee-EN-mar or /maɪˈænmɑr/ my-AN-mar (also with the stress on first syllable); Burmese pronunciation: [mjəmà]), என்பது ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இறைமையுள்ள நாடாகும். இது இன்றைய இரும்புத் திரை நாடு ஆகும். 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ என்று மாற்றினர்.
டைஃபாய்டு காய்ச்சல் என்பது, சால்மோனெல்லா டைஃபி அல்லது பொதுவாக குடற்காய்ச்சல் என்று அழைக்கப்படும் ஒரு வகையான நோய் ஆகும். உலகம் முழுவதும் பொதுவாக, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் மலத்தினால் அசுத்தமாக்கப்பட்ட உணவு அல்லது தண்ணீரை உட்கொள்ளுவதால் இது பரவுகின்றது. பின்னர், இந்த நுண்ணுயிரி (பாக்டீரியா) கிருமி, குடல் சுவரை துளைத்து நுழைந்து இரத்த விழுங்கணுக்களினால் விழுங்கப்படுகிறது.
மறைசெய்தியியல் (ஆங்கிலம் - Steganography) (ஸ்டிகனோகிராபி), என்பது அனுப்புபவர் மற்றும் பெறுபவரைத் தவிர வேறு ஒருவருக்கும் அங்கு ஒரு செய்தி இருக்கிறது என்கிற சந்தேகமே தோன்றாத வகையில், மறைசெய்திகளாக செய்திகளை எழுதும் கலை மற்றும் அறிவியல் ஆகும். இது புலப்பாடுக்கு தெளிவற்று இருப்பதன் மூலம் செய்தியைப் பாதுகாக்கிறது. ஸ்டிகனோகிராபி என்கிற வார்த்தை கிரேக்க மூலத்தில் இருந்து வந்ததாகும், இதன் பொருள் “மறைபொருளுடன் எழுதுவது” என்பதாகும்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
எலுமிச்சை (Lemon) சிட்ரசு எலுமிச்சை (எல்) ஓசுபேக் என்ற தாவரவியற் பெயர் கொண்ட நிலம்வாழ் தாவரமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம் பூக்கும் தாவரம் என்ற துணைப்பிரிவில் ருட்டேசி குடும்பத்தின் உறுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலும் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல மண்டலப் பகுதிகளில் இது வளர்கின்றது. குறுஞ்செடி வகைத் தாவரமாக எலுமிச்சை அறியப்படுகிறது.
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 - 3 பெப்ரவரி, 1969) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
புள்ளியியல் அல்லது புள்ளிவிபரவியல் என்பது, தரவுகளைச் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம் என்பன குறித்த பாடத்துறை ஆகும். கள ஆய்வுகள், சோதனைகள் என்பவற்றின் வடிவமைப்புத் தொடர்பிலான தரவுச் சேகரிப்புத் திட்டமிடல் உட்பட மேற்குறித்தவற்றில் எல்லா சிறப்புகளையும் இத்துறை கையாள்கிறது. புள்ளியியலில் உரிய பயிற்சி பெற்று அத்துறைசார் பணிகளில் ஈடுபடுபவர் புள்ளியியலாளர் எனப்படுவார்.